118 கிலோ நிறையுடைய கஞ்சா வல்வெட்டித்துறையில் மீட்பு
யாழ்.வல்வெட்டித்துறை கடற்கரையில் இருந்து 118 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதை பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு சென்ற கடற்படையினர் குறித்த கஞ்சா போதை பொருளை மீட்டனர். கடற்படையினரால் மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளை கடற்படையினர் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் , தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கஞ்சா பொதிகளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed